search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கொறடா தரப்பு வாதம் நிறைவு"

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அரசு கொறடா தரப்பு வாதம் இன்று நிறைவுபெற்றதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து, இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.

    நேற்றைய விசாரணையின்போது, முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது, முதல்வரை மாற்றக்கோரி 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது எனவும் கூறினார்.

    இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது அரசு கொறடா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.



    அப்போது, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியானதுதான் என்றும் சபாநாயகரின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், சபாநாயகர் அழைத்ததும் தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்ததால் ஜக்கையன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    அரசு கொறடாவின்வாதம் இன்று நிறைவடைந்ததையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.  #18MLAsCase #MLAsDisqualificationCase #MadrasHC
    ×